சேது சமுத்திரத் திட்டம்: ராமருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்- கருணாநிதி

அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டி,
கேள்வி: சேது சமுத்திர திட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், புதிதாக எதுவும் தெரிவிப்பதற்கில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: மத்திய அரசு மாத்திரமல்ல; பகுத்தறிவுவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களும், தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீதும் அக்கறையுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் எடுக்க வேண்டிய முடிவு, அது சேது சமுத்திர பாலத்தை அங்கே அமைக்க வேண்டுமென்பதாகத்தான் இருக்க முடியும்.
அதற்குப் பதிலாக அதை தேசிய சின்னமாக ஆக்குவது என்பது அவர்களுடைய ஆசைக்கு வேண்டுமானால் அது தேசிய சின்னமாக இருக்கலாம். ஏன் சேது சமுத்திரத் திட்டமே நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பிறகு அதை தேசிய சின்னம் என்று அறிவித்தால் என்ன ஆகிவிடும்?.
சேது சமுத்திரத் திட்டத்தை உருக்குலைப்பதற்காக ராமர் பெயரைப் பயன்படுத்தி அவருக்கும் கெட்ட பெயரை உண்டாக்குகிறார்கள். அதற்கு மத்திய அரசு துணை போகாமல் இருந்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு என்ன நிலை எடுக்க வேண்டுமென்று கருதுகிறீர்கள்?
பதில்: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஏற்கனவே ஆய்வுசெய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அங்கே அந்தத் திட்டம் நிறைவேற்றப்படலாம் என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த ஆய்வு முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications