சீனாவின் பிரம்மாண்ட அணைக்கு தொடரும் ஆபத்து: மேலும் ஒரு லட்சம் பேரை வெளியேற்ற திட்டம்
Subscribe to Oneindia Tamil

உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது முன்பைவிட அதிக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேலும் ஒரு லட்சம் பேரை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்றிவிடுவது என்று அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 5386 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications