தாமதமாக நிராகரிக்கப்படும் கருணை மனுக்கள் தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை நீண்ட தாமதத்துக்குப் பிறகு நிராகரிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது.

இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பிட்டா படுகொலை வழக்கில் பஞ்சாபின் புல்லர் என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அவர் கருணை மனு அனுப்பியிருந்தார். ஆனால் அவரது கருணை மனு நீண்ட காலமாக காத்திருப்பில் வைக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது. நீண்டகால தாமதத்துக்குப்ப் பின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருப்பதால் புல்லரை தூக்கிலிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால் இதை மத்திய அரசு எதிர்த்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

இதேபோன்ற ஒரு நிலைமை ராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களும் எதிர்கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த வழக்கில் அளிக்கப்பட உள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+