புளியங்குடி அருகே பதற்றம்- முதல் மரியாதை பிரச்சனையில் கோவிலில் குடிபுகுந்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: புளியங்குடி அருகே கோவில் திருவிழாவில் ஒருதரப்பினருக்கு முதல் மரியாதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக கோயிலில் குடிபுகுந்து கிராம மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும் செவல் கிராமத்தில் உள்ள உச்சி்மகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க. உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான மே 1-ல் பூக்குழி விழா நடைபெற உள்ளது. இதில் ஜமீன்வாரிசான கோமதி முத்துராணி தரப்பினருக்கு முதல் மரியாதை கொடுக்கக் கூடாது என்று பிரச்சனை எழுப்பப்பட்டது. இதனால் கடந்த வாரம் தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தில் சமாதானகூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் வழக்கம் போல் திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் ஆர்.டி.ஓ. முடிவைக் கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கோயிலில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜமீன் வாரிசான கோமதி முத்துராணி தரப்பினர் தற்போதைய பூக்குழி திருவிழாவை நடத்தி கொள்ளவும், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்கள் வரும் ஆடி பொங்கல் திருவிழாவை நடத்த அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இருப்பினும் இன்று கோயில் வாளகத்தில் 2 வது நாளாக கோவிலில் குடிபுகும் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+