இலங்கை பயணத்தில் எனக்குப் பூரண திருப்தி-சுஷ்மா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை பயணத்தைப் பொறுத்தவரை எனக்கும், குழு உறுப்பினர்களுக்கும் பூரண திருப்தியே என்று கூறி விட்டார் இலங்கை சென்ற இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ். அவர் இப்படிக் கூறியுள்ளதன் மூலம் ஈழத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

மேலும் ராஜபக்சேவுக்கும், அவரசு அரசுக்கும் சாதகமான முறையிலும் அவர் பேசியுள்ளார். இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்த சுஷ்மா தனது பயணம் குறித்தும் அவரிடம் நேரில் விளக்கினார். அறிக்கையையும் அளித்தார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய சுஷ்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னிடம் கேட்டால், இந்தப் பயணம் திருப்திகரமாக இருந்தது என்றுதான் சொல்வேன். நாங்கள் அங்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தோம்.

முன்பு முகாமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருந்தனர். தற்போது அவர்களில் 6000 பேரைத் தவிர அனைவரும் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களையும் ஜூன் மாதத்திற்குள் மறுகுடியமர்த்தல் செய்து விடுவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.

நாங்கள் முகாமுக்குச் சென்றபோது அங்கு பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குப் போயிருந்தனர்.

மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் நல்ல முறையில் நடந்து வருகின்றன. குறித்த காலத்திற்குள்ளாகவே அவை முடியும் நிலையில் உள்ளன.

நான் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியபோது குடியிருப்பு பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து ஆலோசித்தேன். அதுகுறித்து ஆவண செய்வதாக அவர் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 13வது பிரிவு திருத்தம் குறித்து ராஜபக்சேவே பேசினார்.

எல்எல்சிஆர் அறிக்கை என்பது உங்களது குழந்தை. எனவே அதை நீங்கள் முழுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் என்பதை ராஜபக்சேவிடம் சொன்னேன்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழர் கட்சிகளின் கருத்து. இதை இலங்கையும் கூட ஆட்சேபிக்கவில்லை. எனவே உங்களுக்குள் பேசித் தீர்க்க என்ன சிரமம் உள்ளது என்று அவர்களிடம் கேட்டேன். விரைவில் இரு தரப்பும் அமர்ந்து பேசி அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் என்றார் சுஷ்மா சுவராஜ்.

மனித உரிமை மீறல் குறித்தோ, போர்க்குற்றங்கள் குறித்தோ, கொல்லப்பட்ட தமிழர்களின் அவலம் குறித்தோ இலங்கை அரசுடன் சுஷ்மா சுவராஜும் மற்ற உறுப்பினர்களும் பேசவில்லை என்பதை இது வெளிக்காட்டுகிறது.

அதேபோல தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதல் குறித்தும் ராஜபக்சேவிடம் எதையும் பேசவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+