''ரெண்டோன் ரெண்டு... புதுக்கோட்டையில் எடுக்க போறாங்க பெண்டு...'': சட்டசபையில் எம்.எல்.ஏ. கவிதை

Subscribe to Oneindia Tamil

Vetrivel
சென்னை: ஓரோன் ஒன்று சங்கரன்கோவில்ல எதிரிங்க வாயில மண்ணு, ரெண்டோன் ரெண்டு புதுக்கோட்டையிலும் எடுக்க போறாங்க பெண்டு என்று அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் இன்று சட்டசபையில் கவிதை பாடி அசத்தினார்.

இன்று சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை குறித்து வெற்றிவேல் எம்.எல்.ஏ. பேசுகையில், புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதனால் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ குடியிருப்புக்குள் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டான். உடனடியாகக் குற்றவாளிகளை கைது செய்யுமாறு அம்மா உத்தரவிட்டார். இதைடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது அந்த அதிகாரிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் புரட்சித் தலைவி ஆட்சியில் ஏழைகளுக்கும் சம நீதி கிடைத்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளின் அட்டகாசம் எல்லாம் அம்மா ஆட்சியில் ஒடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பயமில்லாமல் சுதந்திரமாக உள்ளனர் என்றார்.

மேலும் பேசிய அவர், டி. ராஜேந்திரன் ஸ்டைலில் அடுக்குமொழியில் கவிதை வாசித்தார். ஓரோன் ஒன்று... சங்கரன்கோவில்ல எதிரிங்க வாயில மண்ணு, ரெண்டோன் ரெண்டு... புதுக்கோட்டையிலும் எடுக்க போறாங்க பெண்டு... என்று 10 வரை சொல்லி அசத்தினார். அதிமுக ஆட்சியின் பெருமையைக் கூறும் வகையில் இருந்த இந்த கவிதையை முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைவரும் ரசித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+