மாவோயிஸ்டு பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் சத்தீஸ்கர் அமைச்சர்கள் குழுவும் பங்கேற்பு
ராய்ப்பூர்: கடத்தப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை மீட்பது தொடர்பாக மாவோயிஸ்டுகள் பிரதிநிதிகளுக்கும் சத்தீஸ்கர் அரசு குழுவுக்கும் இடையே இன்று நடைபெற்ற 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனன் கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். சுக்மா மாவட்டத்தை உள்ளடக்கிய பஸ்தார் வனப்பகுதியின் இயற்கை வளத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தது, காவல்துறையின் அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக அலெக்ஸ்பால் மேனனை கடத்தியதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் அலெக்ஸ்பால் மேனனை விடுவிக்க தங்களது இயக்கத்தின் 17 பேரை சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு எதிரான பசுமை வேட்டை என்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்துள்ளனர். அதேபோல் தங்களது பிரதிநிதிகளாக பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோரையும் அவர்கள் நியமித்திருந்தனர்.
இதனால் சத்தீஸ்கர் மாநில அரசும் தங்கள் தரப்பில் ஒரு குழுவை நியமித்தது. இருதரப்பு குழுக்களும் ராய்ப்பூரில் 3 கட்ட பேச்சுகவார்த்தை நடத்தியது. அதன் பின்னர் வனப்பகுதிக்குச் சென்று மாவோயிஸ்டுகளுடன் அவர்களது பிரதிநிதிகள் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பினர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் இல்லத்தில் இன்று காலை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர். இன்றைய பேச்சுவார்த்தையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் அலெக்ஸ்பால் மேனன் விடுதலை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications