தமிழகத்தில் இனி அனைத்து சேவைகளுக்குமே '100' தான்!
சென்னை: தமிழகத்தில் இனி ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்புத்துறை என்று அனைத்து சேவைகளுக்கும் பொதுவாக 100 எண்ணை ஆக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போலீசுக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, ஆம்புலன்ஸுக்கு 102, ஆட்டோ கட்டணம் குறித்த புகார்களுக்கு 103 ஆகிய எண்களை டயல் செய்ய வேண்டியுள்ளது. அதிலும் சென்னை, மதுரை, திருச்சியில் மட்டும் தான் போலீசுக்கு 100. மாநிலத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக கிராமங்களில் மக்கள் அந்தந்த காவல் நிலைய்ததின் தொலைபேசி எண்களில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நிலையை மாற்றி அமெரிக்காவில் எப்படி அனைத்து சேவைகளுக்கு 911 இருக்கிறதோ அதேபோன்று தமிழகத்தில் அனைத்து சேவைகளுக்கும் 100ஐ பொதுவான எண்ணாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அண்மையில் ஒருவர் கிணற்றில் விழுந்துவி்ட்டார். நாங்கள் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுவிட்டோம். ஆனால் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வந்த அவரை கிணற்றில் இருந்து தூக்கும் வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இது கொலையா இல்லையா என்று போலீசார் விசாரிக்க வேண்டியிருந்தது. அதிக மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் அனைத்து சேவைகளுக்கும் பொதுவாக ஒரு எண்ணை வைப்பது அவசியமான ஒன்று என்றார்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்தகான முயற்சிகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications