அதிமுக அமைச்சர்களுக்கு அக்கறையில்லையாம்: சொல்கிறார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அதிமுக ஆட்சியில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கும் மதிப்பில்லை, அவற்றை செய்யும் அமைச்சர்களுக்கும் அக்கறையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: இலங்கையில் மசூதி இடிப்பு பிரச்சனை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

பதில்: இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு 2000க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை, சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது. தென்னிலங்கையில் தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்று வேறொரு செய்தி தெரிவிக்கின்றது. இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர். தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை. மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது; மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர்! இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை.

கேள்வி: சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளாரே?

பதில்: 1988 முதல் 1990 வரை இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி இருக்கிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியாவை சேர்ந்த நீதிபதி ஒருவருக்கு இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்கதாகும். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சார்பில் செயல்படும் நெதர்லாந்தின் "தி ஹேக்'' நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறை அனுபவம் பெற்றுள்ள நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ந்து பாராட்டுவதற்கு உரியதாகும்.

கேள்வி: ஆசிரியர்கள் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதைப் பற்றி உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளதே?

பதில்:
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23-8-2010க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி, அதன் அடிப்படையில் 23-8-2010க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறியுள்ளது. ஆனால் 23-8-2010-க்கு பின்பு பணியில் சேர்ந்த பட்டதாரி-இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை 25 ஆசிரியர்கள் அணுகினர். உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பில் 25 ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத அரசு நிர்ணயித்துள்ள தேதியான 23-8-2010க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு மதிப்பில்லை; அவற்றை செய்யும் அமைச்சர்களுக்கும் அக்கறையில்லை. ஆரம்பம் முதலே பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது. சமச்சீர் கல்வியில் தொடங்கிய சோதனை, சமச்சீர் பாடப்புத்தகங்களுக்கும் பரவி, தற்போது ஆசிரியர் நியமனத்திலும் நிலவுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+