கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு எக்ஸ்ட்ரா பவர் கொடுங்க: பிரதமருக்கு நாராயணசாமி கோரிக்கை

இது குறித்து அவர் புதுவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரில் பாதிக்கப்பட்டு அங்குள்ள முகாம்களில் உள்ள தமிழர்களின் மறுவாழ்விற்காக இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் ரூ.1000 கோடியில் ரயில்வே திட்டம், ரூ.1, 250 கோடி செலவில் ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டி வழங்கும் திட்டம், 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முகாம்களில் அகதிகளாக உள்ள தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கும் 13வது சட்ட திருத்தத்தை கொண்டு வர இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கூடங்குளத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும். அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 2 கடிதங்கள் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்பற்றாக்குறையைப் போக்க கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். இது தொடர்பாக அவர் விரைவில் நல்ல பதிலைக் கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications