நித்தியானந்தாவை நீக்க இந்து அமைப்புகள் திரள வேண்டும்... ஸ்ரீதர் வாண்டையார்

சீர்காழியில்நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டது கேலிக்கூத்து. நித்யானந்தா பாலியல் குற்ற வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர். அவரை திரும்பப் பெறவேண்டும். நித்யானந்தாவை திரும்பப் பெற இந்து அமைப்புகள் போராட வேண்டும்.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிக்கு 31 அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி முன்னோடிகள் கொண்ட குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். இதேபோல் தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறையை சரிசெய்ய மத்திய அரசுடன் பசி கூடுதல் மின்சாரத்தை பெற குழு அமைக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தவும் குழு அமைக்க வேண்டும். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட தமிழக கலெக்டரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அருகில் உள்ள மாநிலத்தில் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications