நாடு முழுவதும் இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil

2012 -2013ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் முதல் வகுப்பு, ஏசி வகுப்பு ரயில் கட்டண உயர்வை தவிர மற்றவை வாபஸ் பெறப்பட்டன.
பட்ஜெட்டில் ரயில்வே பிளாட்பார டிக்கெட் ரூ.3ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த கட்டண உயர்வு ரத்து செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மே 1ம் தேதி முதல் பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications