For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

Train
சென்னை: நாடு முழுவதும் இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2012 -2013ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் முதல் வகுப்பு, ஏசி வகுப்பு ரயில் கட்டண உயர்வை தவிர மற்றவை வாபஸ் பெறப்பட்டன.

பட்ஜெட்டில் ரயில்வே பிளாட்பார டிக்கெட் ரூ.3ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த கட்டண உயர்வு ரத்து செய்யப்படவில்லை.

இந்த நிலையில் மே 1ம் தேதி முதல் பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் ரூ.5 ஆக உயர்ந்துள்ளது.

English summary
Railway platform ticket costs Rs.5 from today. The platform ticket price was increased from Rs.3 to Rs.5 during the Railway Budget for 2012-13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X