48 மணி நேரத்தில் கலெக்டர் அலெக்ஸை விடுவிக்க மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல்- சட்டிஸ்கர் முதல்வர்

இதுகுறித்து அவர் கூறுகையில்,அரசின் சார்பில் மாவோயிஸ்டுகளுடன் பேசச் சென்ற மத்தியஸ்தர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பரஸ்பர உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. இரண்டு அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன.எனவே இன்னும் 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறோம் என்றார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிப்பது தொடர்பான உடன்பாடு ஏதும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக 17 மாவோயிஸ்ட் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பி்ல கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையே என்ன உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்குகளைப் பரிசீலனை செய்ய 3 உறுப்பினர் குழு ஒன்றை அமைக்க அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications