மும்பை: ஏற்கனவே அமிதாப் பச்சன், ஹேமமாலினி, ஜெயா பச்சன் ஆகியோரை ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாக்கினர். அவர்கள் அங்கு போய் என்ன செய்து விட்டனர்.இப்போது ஒரு கிரிக்கெட் வீரரை ராஜ்யசபாவுக்குக் கூட்டிப் போயுள்ளனர். இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் டர்ட்டி பிக்சர்ஸ். வேறென்ன சொல்வது என்று காட்டமாக கூறியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பியாக்கியிருப்பது குறித்து பால் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சச்சின் இன்று பெரிய ஆளாகி விட்டார். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்த ராஜ்யசபாவில் ஏற்கனவே அமிதாப் பச்சன் உறுப்பினராக இருந்துள்ளார். ஜெயா பச்சன் இருக்கிறார், ஹேமமாலினி இருக்கிறார். ஆனால் இவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். எதையும் செய்யவில்லை.
நான் ஒருபோதும் ராஜ்யசபா உறுப்பினராக மாட்டேன். அதற்கெல்லாம் தகுதி வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் முதலில் யோசிக்க வேண்டும். சிறப்பாக செயல்பட முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு கிரிக்கெட் வீரரால் ராஜ்யசபாவில் போய் என்ன செய்ய முடியும். இதையெல்லாம் ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதுதான் காங்கிரஸின் டர்ட்டி பிக்சர்ஸ். இதில் அவர்கள் நினைப்பவர்களைப் போட்டுத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்த தாக்கரே.
Shiv Sena supremo Bal Thackeray took a dig at Tendulkar's nomination. He said, "Sachin is very big today, and I am proud of it. There are many who have been in the Rajya Sabha - Amitabh Bachchan, Jaya Bachchan, Hema Malini - but they all keep quiet. I would never become a member of the Rajya Sabha, because one needs to ask what scope there is for a member. What role can a cricketer play in Rajya Sabha? People in the Rajya Sabha need to think on their own. This is the Congress' dirty picture, where Rajya Sabha seats are being forced on people."