சிறுமி நரபலி வழக்கில் கைதான திமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்
மதுரை: மதுரையில் சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான அயூப்கான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தொத்தன் என்பவரின் இளைய மகள் ராஜலட்சுமி(5) நரபலி கொடுக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான அயூப்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை திமுகவில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் பி. மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் ஆயூப்கான் என்பவர் சிறுமியை நரபலி கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடனே அவரை நேரில் அழைத்து மாவட்ட செயலாளர் என்ற முறையில் விசாரித்தேன். அப்போது இந்த குற்றச்சாட்டை அயூப்கான் முற்றிலும் மறுத்தார்.
இருப்பினும் திமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான இந்த செயலை அவர் செய்யவில்லை என நிரூபித்து இதிலிருந்து விடுபடும் வரை அயூப்கானை திமுக நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை எனவும், அவரை அன்றாட நடவடிக்கைகளில் இருந்து நீக்கி வைப்பது எனவும் மாவட்ட செயலாளர் என்ற முறையில் இந்த முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications