சச்சினுக்கு எம்.பி. பதவிக்கு பதிலாக பாரத ரத்னா கொடுக்க வேண்டும்: அன்னா ஹசாரே

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தது குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கிரிகெட்டில் பிசியாக இருக்கும் அவருக்கு எதற்கு எம்.பி. பதவி கொடுத்தார்கள் என்று பலரும் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.
வலுவான லோக் ஆயுக்தா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அன்னா அவுரங்காபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பி.யாக்கியதன் நோக்கமே புரியவில்லை. சச்சினை எம்.பி.யாக்கியது குறித்து அறிந்ததும் வருத்தப்பட்டேன். காரணம் அத்தனை பேர் கேட்டுக் கொண்டும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லையே. உண்மையிலேயே சச்சினை கௌரவிக்க விரும்பினால் மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதல்லவா வழங்கியிருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications