சித்திரைத் திருவிழா-கூத்தாண்டவர் கோவிலில் தாலியறுத்து, ஒப்பாரி வைத்து அரவாணிகள் விதவைக் கோலம்
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரவாணிகள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து, கூட்டமாக கூடி ஒப்பாரி வைத்து கதறியழுது விதவைக் கோலம் பூண்டனர்.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் பூசாரி கையால் அரவாணிகள் தாலி கட்டிக் கொண்டனர். அதன் பின்னர் இரவு முழுவதும் அரவாணிகள் கூட்டம் கூட்டமாக ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
இதையடுத்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான அரவாணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உளுந்தூர்ப்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு தேரோட்டைத்தைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அரவாணிகள் தாலியறுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பிற்பகல் ஒன்றரை மணியளவில் நத்தம் கிராமத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதை அரவான் களப்பலி நிகழ்ச்சி என்கிறார்கள்.
போர்க்களத்தில் அரவான் களப் பலி கொடுக்கப்படுவதாகவும், இதனால் அரவாணிகள் தங்களது தாலியை அறுத்து விதவைக் கோலம் பூணுவதாகவும் இந்த நிகழ்ச்சி அமைகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சியின்போது அரவாணிகள் கழுத்திலிருந்த தாலியை கோவில் பூசாரிகள் அறுத்தார்கள். பின்னர் வளையல்களை உடைத்தெறிந்தார்கள். நெற்றிப் பொட்டை அழித்தார்கள். இதையடுத்து அரவாணிகள் கூட்டம் கூட்டமாக ஒப்பாரி வைத்துக் கதறியழுதது உருக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியுடன் அரவாணிகளின் திருவிழா முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அரவாணிகள் தத்தமது ஊர்களுக்கு மிகுந்த மன நிறைவுடன் புறப்பட்டு்ச சென்றதைக் காண முடிந்த்து.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications