கடந்த நிதி ஆண்டில் மெர்க்கன்டைல் வங்கியில் வணிக வளர்ச்சி 25.75 விழுக்காடு

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குனர்கள் குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகன்னாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2011-12ம் ஆண்டில் மெர்க்கன்டைல் வஙகியானது குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் வங்கி தனது மொத்த வணிகத்தில் 25.75 விழுக்காடு வளர்ச்சி அடைந்து ரூ.31034 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகையில் 24.11 விழுக்காடு வளர்ச்சி அடைந்து ரூ.17.137 கோடி என்ற நிலையை எட்டியுள்ளது.
கடன்களை பொறுத்தமட்டில் 27.84 விழுக்காடு வளர்ச்சி அடைந்து ரூ.13.897 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. வங்கியின் நிகர லாபம் 31-3-2012ல் ரூ.313.46 கோடியை அடைந்து இதன் வளர்ச்சி விகிதம் 24.93 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும் 31-3-2013க்குள் மேலும் அதிக முன்னேற்றம் ஏற்பட 50 புதிய கிளைகள், 188 ஏடிஎம் மையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications