சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மூலம் ரூ.3 கோடி வரிவசூல்-அமைச்சர் சி.வி.சண்முகம்
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, ஐபிஎல் போட்டிகளுக்கு வரி விதித்தது சரியான முடிவு தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அ.சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஐபிஎல் 5 கிரிக்கெட் தொடரின் போட்டிகளுக்கு 25 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இன்னும் 4 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டதன் மூலம் ரூ.3 கோடி வரி வசூலாகி உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications