For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மூலம் ரூ.3 கோடி வரிவசூல்-அமைச்சர் சி.வி.சண்முகம்
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, ஐபிஎல் போட்டிகளுக்கு வரி விதித்தது சரியான முடிவு தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அ.சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஐபிஎல் 5 கிரிக்கெட் தொடரின் போட்டிகளுக்கு 25 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இன்னும் 4 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டதன் மூலம் ரூ.3 கோடி வரி வசூலாகி உள்ளது என்றார்.
Comments
English summary
Tamil Nadu School Education minister C.V.Shanmugam said that, Rs. 3 crore has been collected as tax through IPL matches held in Chennai.
Story first published: Friday, May 4, 2012, 19:45 [IST]