ஆபாச சிடி: அபிஷேக்சிங்விக்கு எதிராக உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனில் தீர்மானம்
டெல்லி: ஆபா சிடியில் சிக்கி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவி, நாடாளுமன்ற சட்ட நிலைக் குழு ஆகியவற்றிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாக மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக்சிங்விக்கு அவரது வழக்கறிஞர் தொழிலிலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர்களில் அப்ஷேக்சிங்வியும் ஒருவர்தான். எந்த உச்சநீதிமன்றத்தை தமது வாதத்தால் வாய் பிளக்க வைத்தாரோ அதே உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கூட்டியது. ஆபாச சிடி விவகாரத்தில் சிக்கியிருக்கும் அபிஷேக்சிங்விக்கு தமது வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் எவரும் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என்று அதில் ஒருமனதாக தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறது.
1960-ம் ஆண்டிலிருந்து இதுவரை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இப்படியானதொரு முடிவை எடுப்பது இதுவே முதல் முறை. வழக்கறிஞர் சங்கத்தின் தீர்மான நகல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆபாச சிடி விவகாரம்
அபிஷேக் சிங்வி தமது ஜூனியர் வழக்கறிஞர் ஒருவருடன் ஏடாகூடமாக இருக்கும் சிடி ஒன்று அண்மையில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சிடியை வெளியிட தடை கோரி நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறினார் சிங்வி. பெரும் போராட்டத்துக்குப் பிறகு இந்த சிடி போலியானது என்றும் தமது ஓட்டுநர்தான் இந்த போலி ஆபாச சிடியை தயாரித்தார் என்றும் சிங்வி கூறினார்.
கடைசியாக இந்த சர்ச்சையில் காங்கிரஸ் கட்சி அவரை கழற்றிவிட்டது. வேறுவழியின்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவி மற்றும் நாடாளுமன்ற சட்ட நிலைக் குழு ஆகியவற்றிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு சிங்வி ஆளானார். இந்தப் பதவிகளிலிருந்து சிங்வி விலகிய 9-வது நாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் சிங்விக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications