குடியரசு துணைத் தலைவர்: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலை முன்னிறுத்துகிறதா பாஜக?
Subscribe to Oneindia Tamil

பிரகாஷ்சிங் பாதலைப் பொறுத்தவரையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோருடன் நல்ல உறவைப் பேணி வருபவர் பிரகாஷ்சிங்பாதல்.
அரசியல் கைதியாக சுமார் 17 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர். எமர்ஜென்சி காலத்தில் 2 ஆண்டுகாலம் சிறைத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர். 1980களில் பஞ்சாப் கிளர்ச்சியின் போது பஞ்சாப் மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பஞ்சாப் மாநிலத்தில் 5-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளவர் பாதல். 45 ஆண்டுகால பஞ்சாப் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் அவர்.
இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக சிரோன்மணி அகாலிதளம் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த பாதலின் மகன் சுக்பிர் பாதல், பாஜக என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் பின்பற்றுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications