தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜியாக டேவிட்சன் தேவா ஆசீர்வாதம் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் உளவுத்துறை டி.ஐ.ஜியாக டேவிட்சன் தேவா ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்து வருகின்றது.
தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். பின்பு அவர் அந்த பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். பின்னர் உளவுத்துறை ஐ.ஜி -யாக கோவை போலீஸ் கமிஷனராக இருந்த அம்ரிஷ் புஜாரி நியமிக்கப்பட்டார். ஆனால் உளவுத்துறை டி.ஐ.ஜி. பதவி காலியாகவே இருந்தது.
இந்த நிலையில், உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக டேவிட் சன் தேவா ஆசீர்வாதம் நேற்று நியமியக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications