எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் மே 15 முதல் விநியோகம்
சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 15-ந் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். ஆகிய இரண்டுக்கும் ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ500.
கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அடிக்கப்பட்டன. பின்னர் கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு 30 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனை பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது என்றார் அவர்.
பொறியியல் படிப்புக்கு மே 11-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications