பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு-புதுவையில் ஆர்வத்துடன் ஓட்டு
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் புதுவை, சென்னையில் புதுவை குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 10 பேர் போட்டியிட்டனர். இதில் தற்போதைய அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பிரெஞ்ச் சோசலிஷ கட்சி வேட்பாளர் பிரான்காய்ஸ் ஹோலன்டே முதலிடத்துக்கு சென்றார்.
பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் முதல் கட்ட வாக்குப் பதிவில் முதல் 2 இடங்களைப் பெறுவோர்தான் 2-வது கட்ட தேர்தலில் போட்டியிடுவர்.
இன்றைய வாக்குப் பதிவானது சர்கோசியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியது. பிரான்ஸ் நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் கூட பிரான்சு குடியுரிமை பெற்றிருப்போர் வாக்களித்து வருகின்றனர் சென்னை, புதுச்சேரி, கோவா, காரைக்கால் ஆகிய இடங்களில் பிரான்சு குடியுரிமை பெற்றோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications