அத்துமீற முயன்ற கொழுந்தன்... அலறிய பெண்: சிதம்பரத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: அண்ணன் மனைவியிடம் அத்துமீற முயன்றார் ஒரு வாலிபர். இதையடுத்து அநத்ப் பெண் அலறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

சிதம்பரம் அருகே ஆடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா மணி. 35 வயது இவரது கணவர் பெயர் சிவசண்முகம், இவருக்கு வயது 38. சண்முகத்தின் தம்பி பெயர் குமார், 30 வயதான இவர் அண்ணன் வீட்டிலேயே தங்கியிருக்கிறார், இன்னும் கல்யாணமாகவில்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று சண்முகம் வெளியே போயிருந்தார். லலிதா தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார், தனது அண்ணியிடம் சென்று ஆசைக்கு இணங்குமாறு கூறி அழைத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த லலிதா மறுத்து விட்டார்.

ஆனால் அத்தோடு விடாத குமார், அத்துமீற முயன்றுள்ளார். இதையடுத்து லலிதா அலறினார், கூச்சல் போட்டார். இதைக் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதைப் பார்த்துப் பயந்து போன குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து லலிதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் குமாரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+