பெண் ஊழியர்கள் டி சர்ட், ஜீன்ஸ் போட்டா அநாகரீகம்... ஹரியானா அரசு திடீர் தடை!

அரசுப் பெண் ஊழியர்களுக்கான உடை விதிமுறைகளை அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை விதித்து அறிவித்துள்ளது. அதன்படி, ஜீன்ஸ், டிசர்ட் போட்டுக் கொண்டு அரசு பெண் ஊழியர்கள் பணிக்கு வரக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை மட்டுமே கட்டிக் கொண்டு பணிக்கு வர வேண்டுமாம்.
ஜீன்ஸ், டி சர்ட் போன்றவை அநாகரீகமான உடையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சேலை, துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் மட்டுமே நாகரீகமான உடையாக ஹரியானா அரசு கூறியுள்ளது.
ஆண் ஊழியர்கள் பேன்ட், சட்டை மட்டுமே அணிய வேண்டும். இந்த உடை விதிமுறைகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
என்ன காமெடி என்றால் ஹரியானா மாநில பெண்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கீதா புக்கல். இவர் த விர மாநில நிதித்துறை ஆணையர், முதன்மைச் செயலாளர், பெண்கள் நலத்துறை இயக்குநர் ஆகியோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications