பெட்ரோல் இறக்குமதியை ரத்து செய்யுமா இந்தியா?- மன்மோகனை "தாஜா" செய்யும் ஈரான் அதிபர்

அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவையும் அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு மாற்று வழிகளை இந்தியாவும் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தொலைபேசி மூலம் பேசியுள்லார். இப்பேச்சுகளின் போது இருநாடுகளிடையேயான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அஹ்மதிநிஜாத் வலியுறுத்தியிருக்கிறார். இந்தியாவுடனான வர்த்தக உறவை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்திலேயே அஹ்மதிநிஜாத் இம்முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஈரானிடம் இருந்து என்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்துமேயானால் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி அக்பர் சலேயை உடனே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும் அந்நாடு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரானையே தற்போது அதிகம் நம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications