சொத்து குவிப்பு வழக்கு: கே.என்.நேருவிடம் ஒன்றரை மணி நேரம் துருவித், துருவி விசாரணை
திருச்சி: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவிடம் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் ஒன்றரை மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. அவர் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி தில்லை நகர் 10வது கிராசில் உள்ள கே.என்.நேருவுக்கு சொந்தமான வீடு மற்றும் கானக்கினிய நல்லூர், சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், ராமஜெயம் ஆகியோரது வீடுகள் உள்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கே.என். நேருவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று காலை 10 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார்.
துணை எஸ்.பி. ரங்கராஜ் முன்னிலையில் கே.என்.நேருவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications