அரசியல்வாதிகளுக்கு சவால்விட்டு பேனர் வைக்கும் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

Banner
கரூர்: அதிமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி அரசியல்வாதிகள் மட்டும்தான் பேனர்கள் வைக்கனுமா? விடுவமா...நாங்க... என்ற ரேஞ்சில் கரூர் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநரும் பிரம்மாண்ட பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி கரூரில் பேருந்து நிலையம் அருகிலும், சர்ச் கார்னர் அருகிலும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஷோபனா மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் ஆகியோர் பெயரில் அவர்கள் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.

இதில், கரூர் மாவட்டத்திற்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ37.55 கோடி செலவில் 2 ஆயிரத்து 86 வீடுகள் வழங்கியும், தாய் திட்டத்திற்கு (தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ) 2 ஆயிரத்து 636 பணிகளுக்கு ரூ.20.6 கோடி வழங்கிய முதல்வருக்கு நன்றி. நன்றி என்று மாவட்ட ஆட்சியர் ஷோபனா, மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் ஆகியோர் பெயரில் பேனர் அச்சடிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்ட் ஆட்சியரும் திட்ட இயக்குநரும் ரத்தத்தின் ரத்தம் ரேஞ்சுக்கு இறங்கி வந்திருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் கரூர் மாவட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

அப்புறமென்ன.. இருக்கவே இருக்கின்றனர் சிலர் பொதுநலன் வழக்குப் போடவும்! விரைவில் உயர்நீதிமன்றத்தில் கரூர் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநருக்கு எதிராக ஒரு பொதுநலன் வழக்கு தாக்கலாகப் போகிறதாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+