தமிழகத்தில் ஆறுதல் தந்த கோடை மழைக்கு 6 பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் கோடையின் உக்கிரமான அக்னி நட்சத்திரம் உக்கிரத் தாண்டவமாடும் அதே நேரத்தில் ஆறுதல் அளித்து வரும் கோடை மழையால் 6 பேர் பலியாகி இருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கன வெயில் கொளுத்திக் கொண்டுள்ளது. தலைநகர் சென்னையில் தலை முழுவதும் கொப்புளம் வராத குறையாக வெயில் வெளுகத்துக் கட்டுகிறது. இருப்பினும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆறுதல் தரும் வகையில் கோடை மழை பெய்துள்ளது. அதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே அழககவுண்டன்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் ரியல் எஸ்டேட் அதிபரான கிருபாகர் திருச்சிக்கு சென்று கொண்டிருந்த போது மழையால் மரம் முறிந்து விழுந்து பலியானார்.
ஈரோடு மாவட்டத்தில் நஞ்சை ஊத்துக்குளி அருகே மழைக்காக ஒதுங்கி நின்ற போது மரம் சாய்ந்து விழுந்ததில் முத்துசாமி என்பவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் மழையால் வீட்டு கூரை சரிந்ததில் முத்தம்மாள் என்ற பெண் பலியானார்.
மழையால் கரூர் அருகே மாயனூர்-வீரராக்கியம் ரயில் தண்டவாளத்தில் 3 மரங்கள் முறிந்து விழுந்ததால் திருச்சிக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. மயிலாடுதுறை- கோவை இடையேயான ஜனசதாப்தி எக்ஸ்பிரஸும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications