தமிழில் விழுப்புரம் முத்துக்குமரன், கோபி கிருத்திகா 198 மதிப்பெண்களுடன் முதலிடம்
சென்னை: விழுப்புரம் மாணவர் முத்துக்குமரன் தமிழில் 198 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல கோபிச்செட்டிப்பாளையம் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகாவும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரும் 198 மதிப்பெண்கள் பெற்றார்.
முத்துக்குமரன் மொத்தம் 1186 மதிப்பெண்களைப் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வொரு பாட வாரியாக முதலிடத்தைப் பிடித்தவர்கள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.
ஆங்கிலத்தில் நெல்லை
நெல்லை மாணவர் ஸ்டெரபி கிரண் பாண்டியன் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தாவரவியலில் குழித்துறை
குழித்துறையைச் சேர்ந்த மாணவர் மிதுன் ஆனந்த் 200 மதிப்பெண்களுடன் தாவரவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
வரலாற்றில் சென்னை
வரலாற்றுப் பாடத்தில்தான் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. எம்எப்எஸ் தர்மா மேல்நிலைப்பள்ளி மாணவர் திலீப் இப்பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications