நாட்டிலேயே அதிகமாக பெங்களூரில் பெட்ரோல் விலை ரூ.8.49 உயர்வு

Subscribe to Oneindia Tamil

Petrol Price
பெங்களூர்: மத்திய அரசு பெட்ரோல் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியுள்ளது. இதில் நாட்டிலேயே அதிகமாக பெங்களூரில் லிட்டருக்கு ரூ.8.49 அதிகரித்துள்ளது.

மத்திய அரசு நேற்று முன்தினம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அன்று தான் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது. விழாவைக் கொண்டாடிய மறுநாளே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44க அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு நேற்றிரவு விலை உயரும் முன்பு பெட்ரோல் வாங்க மக்கள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏற்கனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளபோது இப்படி அரசு பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே போனால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்று மக்கள் புலம்புகிறார்கள்.

நாட்டிலேயே கர்நாடக தலைநகர் பெங்களூரில் தான் பெட்ரோல் விலை அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.8.49 அதிகரித்துள்ளது. இதையடுத்து ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.36ம், சென்னையில் ரூ.7.98ம், மும்பையில் ரூ.7.91ம் மற்றும் டெல்லியில் ரூ.7.54ம் அதிகரித்துள்ளது.

முக்கிய நகரங்களில் பெட்ரோலின் முந்தைய மற்றும் தற்போதைய விலை விவரம் வருமாறு,

முந்தைய விலை தற்போதைய விலை

டெல்லி - ரூ.65.64 ரூ.73.18
பெங்களூர் - ரூ. 73.51 ரூ. 82
மும்பை - ரூ. 70.66 ரூ. 78.57
சென்னை - ரூ. 69.55 ரூ.77.53
கொல்கத்தா - ரூ.70.03 ரூ.77.53

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+