நம்பிக்கையோடு இருந்த மக்கள் முதுகில் குத்தி விட்டது மத்திய அரசு- விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறுகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளித்துவிட்டு, எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விலையை உயர்த்தியது என்று பொது மக்களின் காதில் பூ சுற்றுகின்ற மத்திய அரசு, வரலாறு காணாத வகையில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுகள் என அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டு காலத்தில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதன் காரணமாக சுமார் 44 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று சுமார் 79 ரூபாய் என்ற அளவில் 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கடுமையான வரிவிதிப்பின் காரணமாக பெட்ரோலின் விலையில் பாதிக்கு மேல் வரியாக செல்கிறது.
விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வினை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக ஏற்கனவே மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இது நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த பொது மக்களின் முதுகில் குத்தியதாகத்தான் நான் கருதுகிறேன்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களான இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோவில் பிரயாணம் செய்பவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இந்த அநியாய விலை ஏற்றத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது விதித்துள்ள அளவுக்கு அதிகமான வரியைக் குறைப்பதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications