புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுகவை ஆதரிப்பதாக புதிய நீதிக் கட்சி ஆதரவு
புதுக்கோட்டை: இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.
இது குறித்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய நிர்வாக்த்தை கண்டு, வியந்து, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் போட்டி போட்டுக் கொண்டு தொழில் துவங்கி வருகின்றன.
தமது திறமையான நிர்வாகத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையும் தமிழக்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுவே அவரது சாதனைக்கு சான்றாகும்.
எனவே, புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.தி.மு.க.-விற்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும். அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications