For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் கோரி ரயில் மறியல் -29 பேர் கைது

Google Oneindia Tamil News

Madurai airport
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக் கோரி ரயிலை மறிக்க முயன்ற தமிழ்நாடு தேவர் பேரவையினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட பல்வேறு அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பாகவும் குரல்கள் எழுவது வழக்கம்.

இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவர் பெயரை விமான நிலையத்துக்கு வைக்கக் கோரி தமிழ்நாடு தேவர் பேரவையினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மதுரை ரயில் நிலையத்துக்குள் நேற்று நுழைந்த அந்த அமைப்பினர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தி 29 பேரைகைது செய்தனர்.

English summary
Tamil Nadu Devar Peravai activists staged a rail roko at Madurai junction demanding new name for the Madurai Airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X