விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் கோரி ரயில் மறியல் -29 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட பல்வேறு அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பாகவும் குரல்கள் எழுவது வழக்கம்.
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவர் பெயரை விமான நிலையத்துக்கு வைக்கக் கோரி தமிழ்நாடு தேவர் பேரவையினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மதுரை ரயில் நிலையத்துக்குள் நேற்று நுழைந்த அந்த அமைப்பினர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்றனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தி 29 பேரைகைது செய்தனர்.












Click it and Unblock the Notifications