தர்மபுரி அருகே மலையில் லாரி உருண்டு விபத்து - 15 பேர் பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே லாரி ஒன்று தாறுமாறாக ஓடி மலைப் பாதையில் கவிழ்ந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
மாரவாடி என்ற இடத்திலிருந்து மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஒருலாரி சென்று கொம்டிருந்தது. பெங்களூர் நோக்கி அந்த லாரி சென்றபோது மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது.
லாரியில் மாங்காய் லோடுடன், ஏராளமான பேரும் பயணித்துள்ளனர். அவர்களில் 18 பேர் பெண்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 50 பேர் வரை அதில்பயணித்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரம் என்பதாலும், மலைப் பாதை என்பதாலும் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீஸார், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications