நான் கரைபடுத்தப்பட்டேனே தவிர கரைபடியவில்லை: இளைய ஆதீனம் நித்யானந்தா

மதுரை ஆதீன மடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், இளைய ஆதீனம் நித்யானந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது நித்யானந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த மருத்துவ முகாம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிப்படுகின்றது. ஸ்கேன் உள்பட அனைத்து பரிசோதனைகளும், மருந்துகளும் பொது மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 10,000க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். மேலும் மடத்திற்கு சொந்தமான இடத்தில் 47 இயந்திரங்கள் மூலம் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படும்.
மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை 140 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த சொத்துக்களை மீட்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் எனக்கு ஒரு கோடி சீடர்கள் உள்ளனர். ஆன்மீக உலகில் நான் கரைபடுத்தப்பட்டேனே தவிர கரைபடியவில்லை என்பதை நிரூபிப்பேன்.
சென்னை நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் உள்ளது. அங்கு எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அவரை சந்தித்து பேசுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications