இந்திய விண்வெளி திட்டங்கள் முடக்கம்-மாதவன் நாயர் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி: இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கிய திட்டங்களாக மார்ஷ் மிஷன், சந்திராயன்-2, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் போன்ற திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்ட்ரிஸ்-தேவாஸ் மல்டி மீடியா ஒப்பந்தம் தொடர்பாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை. இஸ்ரோ நிறுவனத்துக்காக நேர்மையாக உழைத்த எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு பழி வங்கிவிட்டனர்.
இந்திய விண்வெளி ஆய்வில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. திட்டப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல புதிய திட்டங்களுக்கு அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கு அதிகாரிகள் தயங்குகின்றனர்.
இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கிய திட்டங்களாக மார்ஸ் மிஷன், சந்திராயன்-2, விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தாமல் விடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மாதவன் நாயரின் குற்றச்சாட்டு இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications