மதுரை ஆதீனத்திற்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
திருவாரூர்: மதுரை ஆதீன மடத்தில் சிவனடியார்களுடன் சென்று தேவாரம் பாடவுள்ளோம். இதற்கு அரசு அனுமதி மறுத்தால் தடையை மீறி நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவை நடத்த அனுமதி மறுத்தால் தடையை மீறி உள்ளே நுழைவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
இது குறித்து திருவாரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருமுறை என்பது தமிழுக்கும், சைவத்துக்கும் ஏற்றம் தரக்கூடிய முக்கிய நிகழ்வாகும். திருவாரூரில் நடைபெறும் இந்த திருமுறைப் பேரணி அரசியல் சாராத பண்பாடு சார்ந்த கலாச்சார நிகழ்ச்சியாகும்.
ஜூன் 5ம் தேதி திருஞான சம்பந்தர் குருபூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்று மதுரை ஆதீன மடத்துக்குள் ஆயிரக்கணக்கான சிவனடியார்களுடன் சென்று வழிபாடு செய்து தேவாரம் பாடவுள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி மறுத்தால் தடையை மீறி ஆதீனத்திற்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
சேக்கிழார் கல்விப் பண்பாட்டுக் கழக 5வது மாநில மாநாட்டில் சைவ, வைணவ கல்வியை தமிழகத்தில் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications