பெட்ரோல் தட்டுப்பாடு குறைகிறது.. சகஜ நிலை திரும்புகிறது!

Subscribe to Oneindia Tamil

Petrol Bunk
சென்னை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக கப்பல்கள் மூலம் அவை கொண்டு வரப்பட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் பற்றாக்குறை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் சகஜ நிலை படிப்படியாக திரும்பத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணிநேரங்களிலேயே சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. தொடர்ந்து டீசலும் விலை உயரும் என்று கருதி பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என்று தட்டி போர்டுகளை வைத்தனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விலையையும் ஏற்றி விட்டு விற்பனையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டதால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து பிரச்சினையை சரி செய்ய கப்பல்கள் மூலம் குஜராத், கொச்சியிலிருந்து பெட்ரோல், டீசல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பத் தொடங்கியுள்ளது.

முன்னதாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக, ஆட்டோக்கள் முடங்கின, மாற்று போக்குவரத்தாக பொதுமக்கள் ரிக்ஷாவை நாடி செல்ல தொடங்கினர். சிந்தாதிரிப்பேட்டை போன்ற குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மார்க்கெட், கோவில், கடைவீதிகளுக்கு செல்ல ரிக்ஷாவை பயன்படுத்தினார்கள்.

ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகம் ஓடாததால், உடைந்து போன மற்றும் ஓரம் கட்டப்பட்ட ரிக்ஷாக்களையும் தூசி தட்டி வடபழனி பகுதிகளில் ஓட்டுவதை காணமுடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+