கர்நாடக காங்கிரஸிலும் கலகக் குரல்: எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா

சட்டமேலவைக்கு தமது தீவிர ஆதரவாளரான சி.எம். இப்ராகிம் என்பவரை சித்தராமையா பரிந்துரைத்திருந்தார். ஆனால் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வர் வெளியிட்டிருந்த அறிக்கையிலோ இப்ராகிம் பெயர் இடம்பெறவில்லை. இதில் செமகடுப்பாகிப் போனார் சித்தராமையா. எப்படியும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் உட்கட்சி மோதலைப் பயன்படுத்தி முதல்வராகிவிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த சித்தராமையாவுக்கு ப்ரமேஸ்வர் செக் வைத்துவிட்டது பேரதிர்சியாக இருந்தது.
இதையடுத்து நேற்று இரவு தமது ஆதரவாளர்களுடன் திடீரென ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சோனியா காந்திக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார் சித்தராமையா.
இதனால் கர்நாடக காங்கிரஸிலும் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்து வீதிக்கு வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications