திருச்சிக்கு அழைக்கிறார்... திராணியார்...: ரவுசு கட்டும் கேப்டன் டைட்டில்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது தேமுதிக. இந்தக் கூட்டணி ரொம்ப நாளாக நீடிக்காமல் போக, தேமுதிகவுக்கு திராணி இருந்தா சங்கரன்கோவில் தொகுதியில தனிச்சுப் போட்டியிடட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பகிரங்க சவால்விட்டார்.
தேமுதிகவும் எங்களுக்கு திராணி இருக்குன்னு நிரூபிப்போம்னு சொல்லி படைபட்டாளத்தோடு களத்துக்குப் போனது. ஆனால் அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் டெபாசிட்டை இழந்து திராணியை "வெற்றி"கரமாக நிரூபித்துவிட்டு வந்தன.
இந்த பின்புலத்தில் இப்பொழுது விஜய்காந்த்துக்கு "திராணியார்" என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர் தேமுதிக தொண்டர்கள். திராணியை நிரூபிக்க முடியாமல் டெபாசிட் போனதை கிண்டலடிக்கும் வகையில் ஒட்டப்பட்டது போல்தான் தோன்றும்.. ஆனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு திராணியார் அழைக்கிறார் என்று போஸ்டர்தான் ஒட்டிருக்கின்றனர்.
இத்தனை வரவேற்புகளுக்கு மத்தியில் திருச்சி வந்த விஜய்காந்த் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஜங்சன் காதிகிராப்ட் சிக்னல் ரவுண்டானா பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications