For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரத்து அதிகரிப்பு: மீன் விலை கடும் வீழ்ச்சி

Google Oneindia Tamil News

Fish
நெல்லை: கடந்த இரண்டு நாட்களாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளதையடுத்து நெல்லைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீன் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

மீன்கள் இனப்பெருக்க காலமான கடந்த ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து மே 31ம் தேதி வரை விசைப்படகுகள் கடலுக்கு மீ்ன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த 45 நாள் தடை காரணமாக கட்டுமரப்படகுகளில் மட்டும் மீன்பிடி தொழில் நடந்தது. இதனால் மீன்வரத்து குறைந்து மீன்களின் விலை உயர்ந்தது.

இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 1ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீன்களின் விலை சுமார் 50 நாட்களுக்கு பிறகு நேற்று குறைந்தது. நெல்லையில் 800 ரூபாய் வரை விற்கப்பட்ட சீலா மீன் 400 ரூபாய்க்கு கிடைக்கிறது. முதல் ரக சீலா மீன் 500 ரூபாயாக இருந்தது.

இதே போன்று பாறை மீன் ரூ.360லிருந்து ரூ.240 ஆகவும், விளா மீ்ன் பெரியது ரூ.380லிருந்து ரூ.360கவும் விற்கப்பட்டது. மேலும் பல்வேறு வகை மீன்களின் விலையும் ரூ.100லிருந்து 50க குறைந்துள்ளது. இதனால் பொது மக்கள், மீன்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Fish prices have gone down suddenly as motorboats have started fishing after the 45 days ban. Fish lovers are happy about this fall in prices.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X