Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சத்தில் டயாலிசிஸ் வாகனம் வழங்கிய சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி எம்.எல்.ஏ.வும் சமக தலைவருமான சரத்குமார் ரூ.30 லட்சம் செலவில் டயாலிசிஸ் வாகனம் ஒன்றை தென்காசி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சலால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடையநல்லூர், வடகரை, தென்காசி, புளியங்குடி, விகேபுரம், சுரண்டை என அனைத்து பகுதிகளிலும் இக்காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்காசி, நெல்லை ஆகிய இரு பகுதி மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்ட மருத்துவமனையில் ரத்தம் சேமிக்கவும், ரத்தத்தை சுத்தீகரித்து நோயாளிகளுக்கு ஏற்றவும் போதிய வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதனை போக்கும் வண்ணம் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், சமக தலைவருமான சரத்குமார் தனது சொந்த பணத்தில் ரூ.30 லட்சம் செலவில் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்யும் கருவி பொருத்தப்பட்ட வாகனம் வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய், அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரிடம் அந்த வாகனத்தின் சாவியை அவர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் துரையப்பா, சரத்குமார் மற்றும் மருத்துவமனை உயர் அதிகாரிகள் தென்காசி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக விழிப்புணர்வு பேரணியும் நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+