நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் துவக்கம்: மாணவிகள் அதிக ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி. உள்ளிட்டவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளான பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி.(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப்படிப்பு), பி.எஸ்.சி. (ரேடியோடயக்னோசிஸ்) டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோதெரபி, பி.ஒ.டி. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.

ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.350. விண்ணப்பம் பெற கடைசி நாள் ஜூன் 13ம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக உள்ளனர். விண்ணப்ப வினியோகம் துவங்கிய முதல் நாளே ஏராளமான மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+