நிதி அமைச்சகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய கோப்புகள் எரிந்து நாசம்-சதி?

Subscribe to Oneindia Tamil

Finance Ministry Office
டெல்லி: மத்திய நிதியமைச்சகத்தின் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல முக்கிய கோப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்துக்கு சதி ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி நார்த் ப்ளாக் அலுவலகத்தில் நிதி அமைச்சகத்தின் 14,15 ஆகிய அறைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக நிதி அமைச்சகம் சென்றன. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு அறைகளிலும் இருந்த ஏராளமான கோப்புகள், கணிணிகள் மற்றும் ஏசிகள் ஆகியவை எரிந்து நாசமாகி விட்டன. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. நாட்டின் நிதி அமைச்சகத்தில் முக்கிய கோப்புகள் உள்ள இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால் சதி ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+