நிதி அமைச்சகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய கோப்புகள் எரிந்து நாசம்-சதி?
Subscribe to Oneindia Tamil

டெல்லி நார்த் ப்ளாக் அலுவலகத்தில் நிதி அமைச்சகத்தின் 14,15 ஆகிய அறைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக நிதி அமைச்சகம் சென்றன. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு அறைகளிலும் இருந்த ஏராளமான கோப்புகள், கணிணிகள் மற்றும் ஏசிகள் ஆகியவை எரிந்து நாசமாகி விட்டன. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. நாட்டின் நிதி அமைச்சகத்தில் முக்கிய கோப்புகள் உள்ள இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால் சதி ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications