வீரபாண்டியாருக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.ஐ.க்கள், ஏட்டு சஸ்பெண்ட்: கமிஷனர் மாஹாலி அதிரடி

சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கம்மாள் காலனி உள்ளது. அங்கு குடியிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தரப்பு கடந்த திமுக ஆட்சியில் கடும் முயற்சி செய்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அங்கிருந்த குடிசைகளுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு தப்பிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைந்தது. தற்போது மீண்டும் அங்கம்மாள் காலனியில் உள்ள ஒரு குடிசைக்கு கடந்த 2ம் தேதி இரவு மர்ம நபர்கள் தீவைத்தனர். மேலும் 10 குடிசைகளை சூறையாடிவிட்டு தப்பியோடினர்.
இதனையடுத்து கணேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வோலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாலும், வழக்கை அலட்சியப்படுத்தியதாலும், பணியில் சரிவர செயல்படாத காரணத்தினாலும் பள்ளப்பட்டி எஸ்.ஐ. தேவேந்திரன், சிறப்பு எஸ்.ஐ. பன்னீர், ஏட்டு கோவிந்தன் ஆகிய மூன்று பேரை சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாலி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications