தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி: டாக்டர் மயில்வாகணன் நடராஜன் தகவல்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக 50 இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன் கூறுகையில்,
தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 இடங்கள் உள்ளன. அவை தமிழ்நாட்டில் நடத்தப்படும் மருத்துவ கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். இந்த இடங்கள் தவிர அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 292 இடங்கள் சென்றுவிடும். மொத்தம் 1945 இடங்கள் உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இடங்கள் 50 மட்டுமே இருந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு மேலும் 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 100 இடங்கள் உள்ளது.
இதே போல வேலூரில் உள்ள சி.எம்.சி.மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 60ல் இருந்து 100க உயர்த்தப்பட்டுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களை 150க அதிகரித்து இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications