தெலுங்கானாவை எதிர்க்கும் எந்தக் கட்சிக்கும் கூட்டணியில் இடம் கிடையாது: சுஷ்மா

வாரங்கல் மாவட்டத்தில் இடைத்தேர்தலையொட்டி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியானது காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகியவற்றுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டணி வைத்திருக்கிறது.
2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருக்கக் கூடிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியால் தனி மாநில கோரிக்கையை அடைந்துவிட முடியாது. தனித் தெலுங்கானாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் பாஜக போன்ற தேசியக் கட்சியுடன் இணைந்து நின்றால்மட்டுமே தெலுங்கானா கோரிக்கை சாத்தியமாகும்.
பாரதிய ஜனதா போன்ற தேசியக் கட்சி ஒன்றின் ஆதரவு இல்லாமல் எப்படி தனித் தெலுங்கானாவை அமைக்கப் போகிறோம் என்பதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மக்களுக்கு விளக்கியாக வேண்டும்.
கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9- ந் தேதி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications