கள்ளக்காதலனுடன் மகள் ஓடியதால் மருமகன் வீட்டில் அப்பா தற்கொலை!
திருச்செங்கோடு: தனது மகள் கள்ளக்காதலனோடு ஓடிப் போனதால் பெரும் அவமானமடைந்த தந்தை தனது மருமகன் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்தவர் பெருமாள் (45). இவரது மகள் அன்பு. 22 வயதான இவரை, ரமேஷ் என்பவருக்குக் கட்டிக் கொடுத்தார் பெருமாள். இத்தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அன்புவுககும், அதே மருத்துவமனையில் பணியாறறி வந்த இன்னொரு நபருக்கும் இடையே கள்ளக் காதல் கிளர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது கணவர், பிள்ளைகளை விட்டு விட்டு அந்த நபருடன் ஓடிப் போனார் அன்பு. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மாமனாருக்குத் தகவல் தெரிவித்தார். பதறியடித்து ஓடி வந்தார் பெருமாள். இருவரும் வேதனையுடன் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பெருமாள் தனது மருமகன் வீட்டிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.